(1)
அரனை உள்குவீர், பிரமன்ஊருள் எம்
பரனையே மனம் பரவி உய்ம்மினே
(2)
காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின்கழல் பேணி உய்ம்மினே
(3)
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே ஓதிஉய்ம்மினே
(4)
அங்க மாதுசேர் பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே
(5)
வாணிலாச் சடைத் தோணி வண்புரத்து
ஆணி நற்பொனைக் காணுமின்களே
ஆணி நற்பொனைக் காணுமின்களே
(6)
பாந்தளார் சடைப் பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே
(7)
கரிய கண்டனைச் சிரபுரத்துள்எம்
அரசை நாள்தொறும் பரவி உய்ம்மினே
(8)
நறவமார் பொழில் புறவ நற்பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே
(9)
தென்றில் அரக்கனைக் குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா நின்று நினைமினே
(10)
அயனும் மாலுமாய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்றியலும் உள்ளமே
(11)
தேரர் அமணரைச் சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல் நினைந்தோரும் உள்ளமே
(12)
தொழு மனத்தவர் கழுமலத்துறை
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே